பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பெய்துவரும் கனமழையின் விளைவாக நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகையின்போது ஒரு மசூதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மழைசார்ந்த விபத்துகளில் 33 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சிட்ரால் மாவட்டத்துக்குட்பட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள சுமார் 30 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இங்குள்ள உர்சூன் கிராமத்தில் ஒரு மசூதியில் நேற்றிரவு ‘தராவீஹ்’ தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பெருக்கெடுத்து ஓடிவந்த வெள்ளத்தில் அந்த மசூதி அடித்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மாவட்டத்தின் சில பகுதிகளில் 17 பேர் காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குமாறு தெஹ்ரிக் இ இன்ஸாப் கட்சி தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், கைபர் பக்துங்வா மாகாண கவர்னர் இக்பால் ஜாபர் ஜக்ரா ஆகியோர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM