ஒரு மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கொண்டாடுவது தவறு!: மஹிந்த

Published By: J.G.Stephan

23 Jun, 2020 | 05:29 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

இலங்கை பல்லின  சமூகம் வாழும்  நாடு. ஒரு  மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை கொண்டாடுவது தவறானதாகும். தெற்கில் பிறந்தவருக்கும், வடக்கில் பிறந்தவருக்கும் சமவுரிமை உண்டு. ஒரு இனத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி, தேசியத்தை  கட்டியெழுப்புவது  எமது நோக்கமல்ல என  தெரிவித்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மதம், மற்றும் மத தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதை   அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். 

கர்தினால் ஆண்டகை தொடர்பில் எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்து கவலைக்குரியது.  மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

குருநாகல்  - தலவத்தேகெதர பகுதியில் நேற்று இடம்பெற்ற  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  இலங்கை  பல்லின சமூகம் வாழும் நாடு.  அனைத்து இன   மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது. தெற்கில் பிறந்தவர் வடக்கிலும், வடக்கில் பிறந்தவர் தெற்கிலும் வாழ்வதற்கு உரிமை  உண்டு. ஒரு மாகாணத்தை  ஒரு  இனத்திற்குரியது என்று எவராலும் உரிமைக் கொண்டாட முடியாது.  என்பதை மிக தெளிவாக  குறிப்பிட வேண்டும்.

இலங்கையில்  மத பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தொல்பொருள்கள் காணப்படுகின்றன. அவற்றை  பாதுகாப்பதற்கான நடடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்    இந்து, கிருஸ்தவம், மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களின் உரிமைகள், மரபு வழி  கலாச்சாரங்கள்  பாதுகாக்கப்படும். இது  அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஒரு இனத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து தேசியத்தை கட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல.  ஜனநாயக  ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்தே  நல்லிணக்கத்துடன் செயற்பட  வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28