கல்முனை கிணற்றில் ஆவியாகும் கொதிக்கும் நீர் : காரணம் இது தான்!

23 Jun, 2020 | 03:24 PM
image

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் உள்ள நீர் கொதித்து ஆவியாக வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாக வெளியேறுவதாகவும் வெளியான தகவலையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக குறித்த கிணற்றை பார்வையிட சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள்  சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் தான் நீர் ஆவியாகி சூடானதாகவுமு் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

உண்மை தெரிய வந்ததை அடுத்து அப்பகுதியில் நிலவிய சிறுபதற்றம் தெளிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right