இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யத் தயாராகிவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் 19 வயதான துடப்பாட்டவீரர் ஹைதர் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷடாப் கான், வேகப்பந்து விச்சாளர் ஹரிஸ் ரவுப் ஆகியோருக்கு கொவிட் - 19 தொற்றியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த மூன்று வீரர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தப்படுவர்.
இவர்களுடன் இமாத் வசிம், உஸ்மான், ஷின்வாரி ஆகியோருக்கும் ராவல்பிண்டியில் கொவிட் - 19 பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த இருவருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பந்துவீச்சு பயிற்றுநர் வக்கார் யூனிஸ், சகல துறை விரர் ஷொயெப் மாலிக், கிலிவ் டீக்கன் ஆகியோரைத் தவிர்ந்த ஏனைய சகல வீரர்களும் அதிகாரிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்படனர். அவர்களது மருத்துவ அறிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 23ஆம் திகதி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
3 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் இங்கிலாந்து செல்வதற்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது பெரும் சவாலை தோற்றுவித்துள்ளது.
இருப்பினும் வீரர்கள் கூட்டாக பயிற்சிகளை இன்னும் ஆரம்பிக்காததால் குழாத்தில் இடம்பெறும் சகல வீரர்களையும் தனிமைப்படுமாறு கோரவில்லை. ஆனால். குறிப்பிட்ட மூன்று வீரர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை சுய தனிமைக்குள்ளாகுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசனை வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM