தென் ஆசியாவின் புலம்பெயர் அமைப் பின் 3 ஆவது தடவையாக நடைபெறும் அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் செல்லவுள் ளார். எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் இந்த அமர்வுகள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள பிரமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு பிரதான உரையாற்றவுள்ளார்.
அத்துடன் முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெற்கு ஆசியாவில் சட்டம் மற்றும் சமாதானம் என்றும் தொனிப்பொருளின் கீழ் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிராந்திய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் தொடர்பிலான சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் இடம்பெறவுள்ள இந்த அமர்வுகளில் சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட பிராந்திய வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், கல்வி மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொள்வர்.
குறித்த மாநாடு தொடர்பான பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உள்ளூர் பிரதிநிதியாக நியூ மிலேனியம் கொன்ஸெப்ற் பணிப்பாளர் சுரேஸ் ரேஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிப்பட்டுள்ள அறிக்கையில்,
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மற்றும் வர்த்தக மற்றும் தொழிற்றுறை அமைச்சின் கூட்டுறவில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய கற்கைகள் நிறுவகத்தின் (ISAS) ஆதரவில் தெற்கு ஆசிய புலம்பெயர்ந்தோர் மகாநாடு யூலை 18 -19ஆம் திகதிகளில் றபிள் சிற்ரி மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
இம்மகாநாட்டுக்கென சுமார் 1000 புகழ் பெற்ற விருந்தினர்களும் இப்பிராந்தியத்தின் முன்னணி அரசியல் வர்த்தக பிரமுகர்கள், கொள்கை வகுப்பாளர், புகழ்வாய்ந்த நூலாசிரியர்கள் விருது பெற்ற ஊடாகவியலாளர்கள் மற்றும் கல்விமான்களும் ஒன்று திரள்வார்கள்
சிங்கப்பூர் மற்றும் தென்னாசியாவை சேர்ந்த பல அமைச்சரவை அமைச்சர்களும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளும் இதில் உரையாற்றவிருக்கிறார்கள். முக்கிய உரையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றுவார். இதில் உரையாற்றுபவர்கள் 21ஆம் நூற்றாண்டில் ஆசியாவையும் உலகையும் பாதிக்கப் போகின்ற திருப்புமுனை விடயங்களான பூகோள பொருண்மியம் மற்றும் பூகோள அரசியல் தொடர்பான தலைப்புகளின் கீழ் ஆய்வுரைகளையும் விவாதங்களையும் நடத்துவார்கள்.
மேற்படி நடவடிக்கைகள் இடம்பெறும் நேரங்கள் பற்றிய மேலதிக தகவல்களை http:/www.southasiandiaspora.org/pages/default.htmlஇல் பார்வையிடலாம். இந்த நிகழ்வின் மகுடம் போல் பிரதமர் லீ ஹ்சியென் லூங் ஒரு இரவு விருந்தை அளிப்பார்
இந்த மகாநாடானது குழுநிலை கலந்துரையாடல்கள், குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கான வலையமைப்பு உருவாக்க அமர்வு என்பன அடங்குவதோடு தற்போது தொழிற்றுறை எதிர்கொள்ளும் முக்கிய விடயங்களில் எற்பட்டிருக்கும் புதிய போக்குகள் மற்றும் நிகழ் காலமட்டத்துக்கு கொண்டு வருதலும் இடம்பெறும். உலகவங்கி, IFC, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் AIIBஇன் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான பிரத்தியேக வாய்ப்பாகவும் இது இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM