நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய சம்பந்தப்பட்ட படையினரிடம் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உடனடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு நேற்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதி சிவம் அடிகளாரினால், முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளருமான, அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து, இந்த செயற்பாடுகள் தொடர்பில், அங்கஜன் இராமநாதனினால் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று பணிப்புரை விடுத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் இனி நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு இன்று காலை உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட படையினர், இந்த விடயம் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்ததுடன், இனி இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM