தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனிடம் வாக்கு மூலமொன்றைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டமையை விநாயகமூர்த்தி முரளீதரன் வீரசேகரி இணையத்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.
நாவிதன்வெளி பிரசேத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த காலத்தில் ஆனையிறவில் 3 ஆயிரம் இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கருணா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
வாக்குமூலம் பெறப்படும் திகதி மற்றும் இடம் குறித்து தன்னிடம் இதுவரை அறிவிக்கவில்லையென்றும் அவர் இணையத்தளத்திடம் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM