இந்திய மற்றும் சீனா எல்லைப்பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினரும் குவிக்கப்படுவதால் அங்கு பதற்றநிலை தொடர்வதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி இரவு திடீரென்று இந்திய-சீன படைகள் மீண்டும் மோதலில் ஈடுபட்டன.
சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தாக செய்திகள் வெளியாகின.
இதனால் இரு நாடுகளின் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு இராணுவ மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருநாட்டு இராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றநிலை தொடர்கின்றது. இந்திய மற்றும் சீனப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, விமான தளங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. மற்றும் கடற்படையும் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM