(எம்.சி.நஜிமுதீன்)
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்தவாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தானது, இஸ்லாம் சமயம் மீது மேற்கொண்ட மாபெரும் மதநிந்தனையாகும். எனினும் அவ்விடயத்தில் முஸ்லிம்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாது பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாம் சமயத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவ்வாறான நிலையிலேயே முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருக்கும் கருத்து மாபெரும் மத நிந்தனை என்பதை எவரும் மறுக்க முடியாது. அது தொடர்பில் உரிய தரப்பிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாகிய நாம் வெகுண்டெழுந்து ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது. அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னா வழிகாட்டியுள்ள அடிப்படையிலும் ஹுதைபிய்யாவின் படிப்பினைகளை முன்நிறுத்தியும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நிலைமைகளை கையாள வேண்டும். கடந்த காலங்களில் நாம் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் பொறுமை கடைப்பிடிக்கப்பட்டதையும் அதன் பலாபலன்களை சமூகம் கண்டுகொண்டதையும் அறிவோம். அவ்வாறே தற்போதைய நிலைமையையும் அணுக வேண்டும்.
மேலும் சந்தர்ப்பம் எதிர்பார்த்திருக்கும் குழப்பவாதிகளுக்கு எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் சில வேளைகளில் துணையாக அமைந்து விடும். எனவே அதற்கு நாம் ஒருபோதும் வழியமைக்கக்கூடாது.. ஆகவே நாம் பொறுமையோடும் அவதானத்தோடும் இருந்துகொள்ள வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM