ஜப்பானின் அமாமி தீவு பகுதியில் கடந்த 18 ஆம் திகதி மாலை அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் அந்த தீவின் வட கிழக்கு பகுதியில் தொடர் மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த நீர் மூழ்கிக் கப்பல் யோகோயேட்-ஜிமா தீவின் மேற்கு பகுதியை நோக்கி நகர்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கப்பலை கண்காணித்து, அது குறித்த தகவல்களை சேகரிக்குமாறு ஜப்பானின் இராணுவத்திற்கு அந்நாட்டு இராணுவ அமைச்சர் டாரோ கோனோ உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு ஜப்பானின் ரோந்து விமானம், லாக்ஹீட்-3 நீர்மூழ்கி கப்பல் தடுப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு விமானம், 3 ரோந்து கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
இதையடுத்து குறித்த நீர்மூழ்கி கப்பலானது சீன கடற்படையினுடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக ஜப்பானின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM