சியபத பினான்ஸ் நிறுவனத்தின் கடன் வரிசைப்படுத்தலை பிற்ச் நிறுவனம் ‘A (Ika) என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது

20 Jun, 2020 | 08:41 PM
image

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான இணை நிறுவனமான சியபத பினான்ஸ், இலங்கையின் மிகவும் நம்பகமானதொரு நிதி நிறுவனமாகும். சியபத பினான்ஸ், அண்மையில் பிற்ச் ரேட்டிங் இடமிருந்து A-(lka) சமநிலை என்ற தரத்திலிருந்து A-(lka) சமநிலை என்ற நிலைக்கு தர உயர்வினைப் பெற்றுள்ளது.

நிறுவனத்தின் கடன் மீள் கொடுப்பனவுகளில் காணப்பட்ட சிறந்த பெறுபேறுகள் மற்றும் தாய் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் சிறந்த பின்னணி ஆகிய காரணங்களினால் குறித்த தரம் உயர்வினை நிறுவனம் அடைந்து கொண்டது.

மிகவும் கடினமான பொருளாதார சூழல் ஒன்று காணப்படும் இந்தக் காலப்பகுதியில், இவ்வாறானதொரு தரம் உயர்வை அடைந்து கொண்டமை நிறுவனத்தின் சக்தியையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது. 

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன இது பற்றிக் கருத்து வெளியிடுகையில்,

'பிற்ச் ரேட்டிங்கிடமிருந்து தரம் உயர்த்தப்பட்ட வரிசைப்படுத்தல் ஒன்றைப் பெற்றுக்கொள்வது, வாடிக்கையாளர்கள் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சிறந்ததொரு சான்றாகக் காணப்படுகின்றது. 15 வருடங்கள் என்ற எமது சேவைகளைப் பூர்த்தி செய்யும் இவ்வாண்டில், இந்த விருதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றறோம்.

நிதிச் சந்தை என்பது, சாதாரணமாகவே ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக அது கடுமையான சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்து.

இவற்றை முன்கூட்டியே அடையாளம் காண நாம் சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளோம். எமது முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும், நம்பிக்கையான மற்றும் சிறந்த தரத்திலான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இவற்றின் காரணமாகவே, சியபத பினான்ஸ் இவ்வாறான வெற்றிகரமானதொரு நிலையை அடைந்து கொண்டது, எமது அனைத்துச் சேவைகளையும், மேலும், எமது வாடிக்கையாளர்களை நெருங்கும் வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்" என்று கூறினார். 

சியபத பினான்ஸ் பற்றி

சியபத பினான்ஸ் நிறுவனமானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். அது, நாடு தழுவிய ரீதியில் தனது கிளைகளைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

பொது மக்கள் தமது வர்த்தக தொலைநோக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவி புரிதல் என்ற ஆர்வத்துடன் செயற்பட்டு வரும் இந்நிறுவனம், தொடர்ந்து, தமது கிளை வலையமைப்பை விருத்தி செய்து கொண்டும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் அபிவிருத்திக்காக தொடர்ந்து உதவிகளை வழங்கியும், தொழில் முயற்சியாளர் நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தும் வருகிறது. சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான மற்றும் மிகப்பெரிய இணை நிறுவனம் ஒன்று என்ற பின்னணியையும், பாதுகாப்பையும் கொண்டு இயங்குவதானல் நிறுவனம் மேலும் வலிமையுடன் செயற்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58