இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை புரிந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயதுடைய பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க சென்றுள்ளார்.
நொய்டாவுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. குறித்த பேருந்தில் 12 க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.
இரவு 2 மணியளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் மேலும் இருவரும் குறித்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை புரிந்த இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM