ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் உலக சம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறிய முறைப்பாடு காரணமாக இடைநீக்கப்பட்டுள்ளார்.
கத்தாரின் தோஹாவில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் அமெரிக்க குறுந்தூர ஓட்ட வீரரான கிறிஸ்டியன் கோல்மன் 9.76 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும், 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் தான் எங்கு இருக்கிறேன் என்ற ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய அவர் கடந்த டிசம்பர் 9 ஆம் திகதியும் தன்னை ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளத் தவறினார். ஓராண்டில் 3 ஆவது தடவையாக இந்த விதிமுறையை மீறியதால் அவரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகாமையின் தடகளத்துக்கான நேர்மை கடைப்பிடிப்புப் பிரிவு கோல்மனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
தற்போது அவர் மீது விசாரணை நடத்தப்பட்டுவருவதுடன், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனமானால், அவருக்கு 2 ஆண்டு காலம் வரையான தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அவரால் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போகும்.
இந்த விவகாரம் குறித்து 24 வயதான கோல்மன் டுவிட்டரில் அளித்த விளக்கத்தில் ‘கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி குறிப்பிட்ட நேரத்தில் நான் பக்கத்தில் சிறிது நேரம் ‘ஷொபிங்’ சென்று விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் ஊக்கமருந்து எடுப்பவர் எனது வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் ஒரு மணி நேரம் அங்கு இருக்கவில்லை. அவர் எனக்கு தொலைப்பேசி மூலம் ஓர் அழைப்பு விடுத்திருந்தால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வழக்கமாக மாதிரிகள் சேகரிக்க வரும் நபர், எனக்கு தொலைப்பேசி அழைப்பு விடுப்பார். ஆனால் இந்த முறை நான் இச்சோதனையை தவற விட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் செயற்பட்டிருப்பது போல் தோன்றுகிறது.
இந்த சம்பவத்துக்கு பிறகு கூட நான் பல முறை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளேன். உடற்திறனை அதிகரிக்க நான் ஒரு போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை. ‘நான் தவறு செய்வதில்லை’ என்பதை நிரூபிக்க எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊக்கமருந்து பரிசோதனைக்கு தயாராக இருப்பேன்.
உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமையின் நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. ஆனால் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் தேவை’ என்று கூறியுள்ளார்.
விளையாட்டுப் போட்டிகள் இல்லாத காலங்களிலும்கூட முன்னணி வீர, வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு வசதியாக அவர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், நேரம், இதர பணிகள் உள்ளிட்ட விபவரங்களை முற்கூட்டியே ஊக்கமருந்து தடுப்பு முகாமுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
குறித்த ஓராண்டில் மூன்று தடவைகள் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறும் போது தடை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப்புக்கு முன்பாக கோல்மன் இத்தகைய பிரச்சினையில் சிக்கியிருந்தார். அதன்பின்னர், தொழில்நுட்ப குளறுபடியை சுட்டிகாட்டித் தப்பித்தார். இப்போது அவர் மறுபடியும் அதே சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM