சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அவைத் தலைவராக தற்போது பதவி வகித்துவரும் இந்தியாவின் ஷ ஷாங்க் மனோகரின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலையில் நிறைவுபெறுகின்றது.
இதன் காரணமாக அடுத்த அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பாகிஸ்தனின் ஏஷான் மானி இருந்தார். அவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளதால் பெரும்பாலும் சௌரவ் கங்குலி போட்டியின்றி அவைத் தலைவராகலாம் என ஐ.சி.சி. வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
'அவைத் தலைவர் பதவிக்க போட்டியிடவில்லை. என்னைப் போட்டியிடுமாறு இந்தியவிலிருந்து சிலர் கேட்டுக் கொண்டனர், ஆனால் எனக்கு அப் பதவியில் இப்போது ஆர்வமில்லை. கங்குலி போட்டியிடுகிறாரா என்பது எனக்குத் தெரியாது
2006இல் எனது பதவிக்காலம் முடிந்தவுடனேயே ஐ.சி.சி. யில் இனிமேலும் பதவி எடுக்கக்கூடாது என முடிவெடுத்தேன். அப்போது நான் போட்டியின்றி தேர்வாகினேன். இப்போது இம்ரான் கான் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்றுமாறு கேட்டுக் கொண்டார், அதனால் ஐ.சி.சி. அவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை' என ஏஷான் மானி தெரிவித்ததாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஐ.சி.சி. அவைத் தலைவர் பதவிக்கு சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாகும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM