அவுஸ்திரேலிய அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இலக்குவைத்து பாரியளவில் சைபர் அதாவது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்கொர்ட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அரச மற்றும் தனியார் துறையின் கணினி வலையமைப்பின் மீது குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொர்ட் மொரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சைபர் தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, அந்நாட்டின் அரச மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதல் தற்போதுவரை இடம்பெற்றுவருவதாகவும் அதனை சீர்செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM