(செ.தேன்மொழி)
சாராதண மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிகாலத்தில் சலுகைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, பொத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால் நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடபோவதில்லை என்றும் இதுவரையில் யாராவது அந்த கட்டணங்களை செலுத்தியிருந்தால் அந்த பணத்தை மீள செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பலரது தொழில் வாய்ப்புகள் பறிபோய்வுள்ளதுடன் , வாழ்வாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளன. இது தொடர்பில் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்த போதிலும் அரசாங்கத்தினால் எந்தவித நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை.
வைரஸ் பரவலின் காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்ததனால், அக்காலப்பகுதிகளில் மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணம் என்பன வழமைக்கு மாறாக இரண்டு , மூன்று அல்லது நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.
அனைவரும் வீட்டில் இருந்தமையினால் மின்சாரம், நீரின் பாவணைகள் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளன. இதனால் கட்டணத் தொகையும் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தில் கட்டணம் தொடர்பான திட்டமிடலின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நாங்கள் தெளிவுப்படுத்தியும் அரசாங்கம் எந்தவித கவனமும் செலுத்தவில்லை.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால். சாராதண மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அசாதாரண முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடபோவதில்லை.
அதனால் இதுவரையும் இந்த கட்டணங்களை செலுத்தாமல் இருப்பவர்கள் தொடர்ந்தும் செலுத்த வேண்டாம். அவ்வாறு எவரேனும் கட்டணங்களை செலுத்தியிருந்தால் எங்களது ஆட்சிகாலத்தில் அந்தக் கட்டணத் தொகையை உரிய தரப்பினப்பிருக்கு மீள செலுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM