(தி.சோபிதன்)
யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பாதுகாப்பு படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
அச்சுவேலியில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம்தொடர்பில் செயற்பட்டு வருகின்றார்.
அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள் முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றது.எனவே நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒரு முக்கியமான கூட்டமாக எனக்கு தென்படவில்லை.
ஏனெனில் கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்தகூட்டம் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.
எனவே நேற்றைய தினம் விசேஷமாக ஒன்றும் பேசப்படவில்லை அதிலும் குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை. ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட கபொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம்.
எங்களால் விடுவிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களையும் இன்றுவரை விடுவித்து ள்ளோம் எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் எனினும் தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM