பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்திற்கு முக்கியத்தும் அளிக்கப்படும்  - அரசாங்கம்

Published By: Digital Desk 3

18 Jun, 2020 | 01:51 PM
image

(நா.தனுஜா)

கொரோனா எனப்படும் கொவிட் - 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்விற்கு அவசியமான சம்பள உயர்வு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதேவேளை, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தற்போதைய அரசாங்கம் பலதடவைகள் உறுதியளித்திருக்கும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையிலேயே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கொவிட் - 19 வைரஸ் பரவலையடுத்து நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து தோட்ட உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் அரசாங்கம் தற்போதைய நெருக்கடி நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களது நல்வாழ்விற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையே முக்கியமானதாகக் கருதுகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்பதே மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே இதுகுறித்த ஏனைய விடயங்களை மேலும் ஆராய்ந்த பின்னர் மீண்டும் தோட்ட உரிமையாளர்களுடன் பிரதமர் சந்திப்பொன்றை நடத்தத் தீர்மானித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01