(நா.தனுஜா)
கொரோனா எனப்படும் கொவிட் - 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நல்வாழ்விற்கு அவசியமான சம்பள உயர்வு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதேவேளை, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தற்போதைய அரசாங்கம் பலதடவைகள் உறுதியளித்திருக்கும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளிக்கையிலேயே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது தற்போதைய நிலைவரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கொவிட் - 19 வைரஸ் பரவலையடுத்து நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து தோட்ட உரிமையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் அரசாங்கம் தற்போதைய நெருக்கடி நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களது நல்வாழ்விற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதையே முக்கியமானதாகக் கருதுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவேண்டும் என்பதே மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே இதுகுறித்த ஏனைய விடயங்களை மேலும் ஆராய்ந்த பின்னர் மீண்டும் தோட்ட உரிமையாளர்களுடன் பிரதமர் சந்திப்பொன்றை நடத்தத் தீர்மானித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM