பாராளுமன்ற தேர்தலில் 5 ஆசனங்களை எமக்கு தாருங்கள் தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதாக சொல்பவர்களின் நோக்கம் தமிழரையே இல்லாமல் செய்வதுதானா என்று முன்னாள் மாகாண அமைச்சரும், வேட்பாளருமான ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வன்னிமாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
சில வேட்பாளர்கள் வரமுடியாத காரணத்தினால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் பிறிதொரு தினத்தில் இடம்பெறும்.
எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 477 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்தமுறை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களை பெற்றிருந்தது.
இம்முறையும் நிச்சயமாக நான்கிற்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளோம்.
பலர் கூட்டமைப்பு. என்ன செய்தது என்ற குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்கள், அது பலதை செய்துள்ளது. குறிப்பாக நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வடபகுதி முழுவதும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
அது அனைவருக்கும் தெரிந்த விடயம். வடமாகாண அமைச்சுகளினூடாக செய்யப்பட்ட அனைத்து விடயங்களுமே கூட்டமைப்பு செய்த விடயங்கள் தான்.
இதேவேளை பலதடவைகள் மத்திய அமைச்சர்களாக பதவியில் இருந்தவர்கள் 5 ஆசனங்களை எமக்கு தாருங்கள் தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதாக சொல்கிறார்கள்.
அவர்களின் நோக்கம் தமிழரையே இல்லாமல் செய்வதுதானா என்ற கேள்வியை எழுப்புகிறேன். ஏனெனில் பலதடவைகள் அமைச்சு பதவிகளை வகித்த காலங்களில் வன்னியிலோ அல்லது அவர்கள் இருந்த யாழ்.தேர்தல் தொகுதியிலோ 50 இளைஞர்கள் வேலைசெய்ய கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா?
அல்லது போரில் சிதைவடைந்த பழைய தொழிற்சாலைகளை கூட புனரமைக்க முடியாத வக்கற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்பது மிகவும் மோசமான நகைப்புக்குரிய விடயம்.
கூட்டமைப்பு பலவிடயங்களை செய்திருந்தாலும் 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது போதாத நிலை உள்ளது. அதனை நாம் ஏற்றுகொள்கின்றோம். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM