எமது பாராளுமன்ற ஆசனங்களை கேட்பது தமிழர்களை இல்லாமல் செய்யவா ? சத்தியலிங்கம் கேள்வி

Published By: Digital Desk 3

17 Jun, 2020 | 08:03 PM
image

பாராளுமன்ற தேர்தலில் 5 ஆசனங்களை எமக்கு தாருங்கள் தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதாக சொல்பவர்களின் நோக்கம் தமிழரையே இல்லாமல் செய்வதுதானா என்று முன்னாள் மாகாண அமைச்சரும், வேட்பாளருமான ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னிமாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

சில வேட்பாளர்கள் வரமுடியாத காரணத்தினால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் பிறிதொரு தினத்தில் இடம்பெறும். 

எதிர்வரும் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 477 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்தமுறை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களை பெற்றிருந்தது.

இம்முறையும் நிச்சயமாக நான்கிற்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளோம். 

பலர் கூட்டமைப்பு. என்ன செய்தது என்ற குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்கள், அது பலதை செய்துள்ளது. குறிப்பாக நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வடபகுதி முழுவதும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.

அது அனைவருக்கும் தெரிந்த விடயம். வடமாகாண அமைச்சுகளினூடாக செய்யப்பட்ட அனைத்து விடயங்களுமே கூட்டமைப்பு செய்த விடயங்கள் தான். 

இதேவேளை பலதடவைகள் மத்திய அமைச்சர்களாக பதவியில் இருந்தவர்கள் 5 ஆசனங்களை எமக்கு தாருங்கள் தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதாக சொல்கிறார்கள்.

அவர்களின் நோக்கம் தமிழரையே இல்லாமல் செய்வதுதானா என்ற கேள்வியை எழுப்புகிறேன். ஏனெனில் பலதடவைகள் அமைச்சு பதவிகளை வகித்த காலங்களில் வன்னியிலோ அல்லது அவர்கள் இருந்த யாழ்.தேர்தல் தொகுதியிலோ 50 இளைஞர்கள் வேலைசெய்ய கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா? 

அல்லது  போரில் சிதைவடைந்த பழைய தொழிற்சாலைகளை கூட புனரமைக்க முடியாத வக்கற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்பது மிகவும் மோசமான நகைப்புக்குரிய விடயம். 

கூட்டமைப்பு பலவிடயங்களை செய்திருந்தாலும் 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது போதாத நிலை உள்ளது. அதனை நாம் ஏற்றுகொள்கின்றோம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59