கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபையால் 320 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் முற்றுமுழுதாக தோல்வி அடைந்துள்ளது என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் தோல்வி அடைந்துள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014,2015 ஆம் ஆண்டுகளில் மாகாண குறிததொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 320 இலட்சம் ரூபா செலவில் உப உணவு பயிர்ச்செய்கையை நோக்கமாக கொண்டு மாயவனூர் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் எவ்வித பயன்பாடும் இன்றி காணப்படுகிறது.
திட்டம் ஆரம்பிக்கப்படும் போது 115 விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் உப உணவு( நிலக்கடலை, மிளகாய்,) மேற்கொள்வார்களய் என மதிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர் 90 பயனாளிகள் 45 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டார்கள் தற்போ அவர்களும் அதனை கைவிட்டுள்ள நிலையில் குறித்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் தொடர்பில் சரியான திட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், குறுகிய நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச்செய்கைக்காக பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் எரிபொருள் செலவினை பகிர்ந்து செலுத்துவதில் ஏற்ப்பட்ட சிக்கல் காரணமாக திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM