இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்தவகையில்,இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்றால் இந்தியாவில் ஒரே நாளில் 2003 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900-லிருந்து 11,903 ஆக அதிகரித்திதுள்ளது.
ஒரே நாளில் மேலும் 10,974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 3,54,065 ஆக உயர்வடைந்துள்ளது.
அதிகபட்சமாக மகராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2,701 பேருக்கு புதியதாக கொரோனாதொற்று உறுதியானதாகவும், 81 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்திய மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
அடுத்தபடியாக டெல்லியில் 1,859 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் அங்கு 93 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1837 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. ஹரியானாவில் மேலும் 550 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குஜராத்தில் புதியதாக 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 500 கடந்துள்ளது. மேற்குவங்கத்தில் மேலும், 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதேபோன்று, ராஜஸ்தானில் 235 பேருக்கும், மத்தியபிரதேசத்தில் 134 பேருக்கும், தெலங்கானாவில் 213 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகளாவிய ரீதியில், 8,264,399 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதோடு,446,135 பேர் உயிரிழந்தும்,4,321,495 குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM