இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
அத்துடன் குறித்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் இந்திய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பு இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதில் இந்திய இராணுவம் தரப்பில் இராணுவ அதிகாரியொருவர் உள்ளிட்ட 3 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக செய்திகள் தெரியவந்தது.
இந்நிலையில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகியிருப்பதாவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய இராணுவ தகவல்கள் தெரிவித்தன.
அதேவேளையில் சீனா தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM