அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னர் நடத்திய தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
அட்லாண்ட்டிக் நகரத்தில் தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதியை தொடங்கி நடத்தியவர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் தாம் நஷ்டமடைந்து விட்டதாக கூறி விடுதியை ட்ரம்ப் எண்டர்டெயின்மெண்ட் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் திருப்பி ஒப்படைத்துவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.
கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப்க்கும் தாஜ் மஹால் சூதாட்ட விடுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனிடையே தங்களது ஓய்வூதியம், காப்புறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தாஜ் மஹால் சூதாட்ட கேளிக்கை விடுதி தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் தமக்கு நெருக்கடி கொடுத்தால் விடுதியையே இழுத்து மூடிவிடுவேன் என தாஜ் மஹால் சூதாட்ட விடுதியின் தற்போதைய உரிமையாளர் ஐசான் மிரட்டி வருகிறார்.
இதில் ஐசானுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாஜ் மஹால் சூதாட்ட விடுதியின் தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்ற வேலை நிறுத்தப் போராட்டம் 34 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM