லா லிகா கால்பந்தாட்ட போட்டித் தொடரின் அய்பார் அணிக்கெதிரான லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட இப்போட்டி ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ரியல் மெட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் கரிம் பென்ஸிமா பரிமாற்றிய பந்தை டோனி குரூஸ் கோலுக்குள் திணித்தார்.
30 ஆவது நிமிடத்தில் சக வீரர் ஈடன் ஹசார்ட் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை ரியல் மாட்ரிட் அணித்தலைவர் சேர்ஜியோ ரேமோஸ் இலாவகமாக கோலாக்கினார். அவ்வணியின் மெர்செல்லோ 37 ஆவது நிமிடத்தில் கோலடிக்க முதல் பாதியில் ரியல் மெட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பதில் கோலடிக்க அய்பார் அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. 60 ஆவது நிமிடத்தில் அவ்வணியின் பெட்ரோ பிகாஸ் ஆறுதல் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அய்பார் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியை அடுத்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரியல் சோசிடேட் மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 28 போட்டிகளில் 17 வெற்றி, 8 சமநிலை, 3 தோல்வியுடன் 59 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்வது இடத்தில் உள்ளது. நடப்பு சம்பியனான பார்ஸினா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM