அமெரிக்காவில் கணவரொருவர் தனது மனைவியின் கடைசி நாள் புற்று நோய் சிகிச்சையினை வித்தியாசமாக கொண்டாடி தனது அன்பை மனைவிக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்தவர் பிராட் போஸ்கட் அவரது மனைவி அலிசனின் மார்பகப் புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
இதனால் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பிராட் கூடவே இருந்து மனைவியை பரிவுடன், கனிவுடன் கவனித்துக் கொண்டார்.
இந்த நிலையில் கடைசி நாள் சிகிச்சையும் வந்தது. கடைசி நாளில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார் பிராட். 500 ரோஜாக்களை அவர் வாங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் சிகிச்சை ஆய்வகத்திற்கு நன்கொடையாக அளிக்க 4500 டொலர் நிதியையும் அவர் வசூலித்தார்.
கடைசி நாள் சிகிச்சை முடிந்ததும் அந்த ரோஜாக்களை மொத்தமாக மனைவியிடம் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தி விட்டார்.
என் மனைவி மீதான அளவு கடந்த அன்பைக் காட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் அவருக்குப் பிடித்த ரோஜாக்களை வரவழைத்துக் கொடுத்தேன் என்றார் பிராட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM