நல்லாட்சியின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகளுக்கு மைத்திரி பொறுப்புக் கூற வேண்டும் : மஹிந்த யாப்பா

Published By: J.G.Stephan

15 Jun, 2020 | 06:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  சுதந்திர கட்சியுடன் கூட்டணியமைத்திருந்தாலும் அரசியல் ரீதியிலான போட்டியில் தனித்தே செயற்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொறுப்பு கூற வேண்டும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை இணைத்துக் கொண்டு  பொதுஜன பெரமுனவினர் அரசியல் ரீதியில் பயணிப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.    

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவில்  ஒரு கூட்டணி கட்சியாகவே இணைந்துள்ளதே தவிர முக்கிய பங்காளி ஒன்றுமல்ல,

பொதுத்தேர்தலில்  பொதுஜன பெரமுன  மொட்டு சின்னத்தில்  போட்டியிடுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகும்.

மக்களே  சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள்.  நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்ற முறைக்கேடுகள், அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கு அரச தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும்.

சுதந்திர கட்சியினர்  பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளதால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுப்பட்டதாக  கருத முடியாது. 

கூட்டணியிமைத்துள்ளோம். அவர்கள் தனித்து  போட்டியிடுகிறார்கள்.  மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டுமா, வேண்டாமா, என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41