உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து தங்கள் நாட்டு நிலைமைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தான் முடிவு செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
7 ஆவது உலக இருபதுக்கு 20 போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 18 அம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. இதன் இறுதித் தீர்மானம் அடுத்த மாதத்துக்கு எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவிக்கையில்,
“உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அதே சமயம் நிதி நிலைமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய அம்சங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இதில் முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதை விட பெரிது எதுவும் இல்லை”.’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “ரசிகர்களின்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. மைதான அரங்கினுள் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகமான சூழலை உருவாக்குவது கடினம். அரங்கில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இங்கிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே அடுத்த மாதம் 8 ஆம் திகதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்ப்பிக்கப்பட உள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக ஏனைய நாடுகளும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும்”’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM