கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘கௌரவ’ என்ற சொற்பதமின்றி கலாநிதி எனப் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டுமென புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து புத்திஜீவிகள் குறிப்பிடுவதாவது,
நாட்டில் போலி டாக்டர்கள் போன்று போலிக் கலாநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அரச அல்லது தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று இளமாணி, முதுமாணி கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து பட்டங்களைப் பெற்ற பின் சொற்ப எண்ணிக்கையிலானோர் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து தங்களது துறைசார் துறைகளில் கலாநிதி கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கலாநிதிப் பட்டங்களைப் பெறுகின்றனர்.
இவ்வாறு கலாநிதி கற்கையைப் பூர்த்தி செய்து பட்டங்களைப் பெறுகின்றவர்கள்; தங்களது பெயர்களுக்கு முன்னால் கலாநிதி எனப் பயன்படுத்தி வருகையில், அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களினால் கௌரவத்திற்காக வழங்கப்படுகின்ற கௌரவ கலாநிதிப் பட்டத்தை, துறைசார் கலாநிதிகள் தங்களது பெயர்களுக்கு முன்னால் கலாநிதி எனப் பயன்படுத்துவது போன்று, கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றவர்களும் கலாநிதி எனப் பயன்படுத்துவது உண்மையான கலாநிதிப் பட்டம் பெற்றவர்களின் தியாகத்தையும் முயற்சியையும் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.
அத்துடன், கௌரவ கலாநிதிகள் தங்களது பெயர்களுக்கு முன்னால் கௌரவம் என்ற பதத்தைத் தவிர்த்து கலாநிதி எனப் பயன்படுத்துவது ஒருவகையில் சாதாரண பொதுமக்களை ஏமாற்றும் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இத்தகைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, கௌரவ கலாநிதிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அவர்களது பெயர்களுக்கு முன்னால் கௌரவ கலாநிதி என்று பயன்படுத்துவதை உறுதி செய்யவும் அவ்வாறு பயன்படுத்தாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உயர்கல்வி அமைச்சும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சும் முன்வர வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கை பல்வேறு சாவல்களுக்கு முகம்கொடுத்து கால நேரங்களை விரயம் செய்து உரிய கல்வி நிறுவனங்களில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களைக் கௌரப்படுத்துவதாக அமையுமெனவும் குறிப்பிடுகின்ற புத்திஜீவிகள், இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் உண்மை நிலையைக் கருத்திற்கொண்டு, கலாநிதிப் பட்டம் எத்தகையது என்பதை உறுதி செய்து அவற்றை செய்திகளின்போது வெளிப்ப டுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM