(இராஜதுரை ஹஷான்)
21 தேர்தல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்களை உள்ளடக்கிய தேர்தல் பிரச்சார கூட்டம் எதிர்வரும் மாதம் இடம் பெறும். எமது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கலந்துக் கொள்வார்.
ஜனாதிபதியின் நோக்கங்களை செயற்படுத்தும் பாராளுமன்றம் நிச்சயம் ஸ்தாபிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி நடத்தப்படும். குருநாகல், கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் கடைப்பிடித்த புதிய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையே பொதுத்தேர்தலிலும் கடைப்பிடிக்கும். சுற்றாடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க்பட்டுள்ளது. 21 தேர்தல் மாவட்டங்களில் உள்ள தொகுதி அமைப்பாளர்களை ஒன்றினைத்து பாதுகாப்பான தேர்தல் பிரச்சார கூட்டம் எதிர்வரும் மாதம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கலந்துக் கொள்வார்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறுவது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்பத்திய மக்களின் எதிர்பார்ப்பினை நிறை வேற்ற வேண்டிய பொறுப்பு ஸ்ரீ லங்பா பொதுஜன பெரமுனவிற்கு உண்டு. எதிர் தரப்பினர் அரசியல் ரீதியில் பலவீனமடைந்துள்ளார்கள். நடப்பு நிலவரங்களை கருத்திற் கொண்டு மக்கள் அரசிய்ல் ரீதியி;ல் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM