(எம்.மனோசித்ரா)
கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை புறக்கணித்து பெருமளவில் பௌத்த மதகுருக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள் இந்த சமூகங்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன.
அத்துடன் இச்செயலணிகள் அரசாங்கம் முன்னெடுக்கும் பெரும்பான்மை போக்கையே பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டு 15 சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் 59 சமூக ஆர்வலர்களால் கையெழுத்திடப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சட்டத்தரணிகள் , பேராசிரியர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் 59 பேரும் , இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் , மனித உரிமைகள் மேம்பாட்டு மையம் , சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சிவில் சமூகத்தை சார்ந்த நாம், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் ஜனாதிபதி செயலணிகள் தொடர்பில் அவதானித்து வருகின்றோம்.
கொவிட்-19 சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மூன்று ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார்.
இவற்றில் ஒரு செயலணிக்கு ஒட்டு மொத்த சமூக வாழ்விற்கு நிலையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான முன்னெடுப்பு, ஒருங்கிணைப்பு, மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ள பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உருவாக்கப்பட்டு இயங்கிவரும் தொல்பொருள் திணைக்களத்தை புறக்கணித்து, இச்செயலணிகள் பரந்த மற்றும் தெளிவற்ற ஆணைகளை கொண்டுள்ளதோடு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நிலையில் அவற்றின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுவதை மேற்பார்வை செய்ய முடியாத ஓர் காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னொருபோதும் நிகழாத விதத்தில் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காணப்படும் ஒரு கட்டத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரீதியிலான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய ஓர் விடயமாகும்.
இச்செயலணிகளின் உறுப்பினர்களில் மிக பெரும்பாலானவர்கள் சிங்கள சமூகத்தை சார்ந்தவர்களாவர். கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரை புறக்கணித்துவிட்டு அதிகளவிலான பௌத்த மதகுருக்களை இம்மாகாணத்திற்கான செயலணி கொண்டுள்ளது.
இச்செயலணிகள் மேற்குறிப்பிட்ட சமூகங்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றது. அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பெரும்பான்மை போக்கையே இவை பிரதிபலிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM