வவுனியா புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது

Published By: J.G.Stephan

15 Jun, 2020 | 10:35 AM
image

வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர் நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டதாகவும், இதேவேளை  குறித்த இருவரும் தகராறில் ஈடுபட்டதோடு புகையிரத நிலைய அதிபருக்கு அச்சுறுத்தலும் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளனர் எனவும் புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக புகையிரத நிலைய தலைமையகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை புகையிரத சேவைகளை நிறுத்துவோம் எனவும் தெரிவித்தமையால் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் புகையிரத நிலைய உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59