(செ.தேன்மொழி)
கொழும்பு நகருக்கு வெளியில் பயணிக்கும் நீண்டதூர பயணிகள் பஸ்கள் உரிய நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்காவிட்டால் முதல் தடவை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதுடன், இரண்டாவது முறையும் குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கொழும்பு நகருக்கு வெளியில் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு முன்னரும், காலதாமதமாகவும் செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன்போது குறித்த பஸ்கள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வரையறுக்கப்பட்டுள்ள காலத்தினையும் விட முன்னரும் அல்லது காலதாமதமாகவும் செல்வதாக தெரியவந்துள்ளன.
இதனால் குறித்த காலத்திற்கு முன்னர் பயணிக்கும் பஸ்கள் நியமித்த காலத்திற்கு முன்னர் செல்வதற்காக அதிக வேகத்தில் செல்லவேண்டி ஏற்படுவதாகவும் , இதனால் அந்த பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன் , சொத்துகள் பறிபோவதற்கான வாய்ப்பும் ஏற்படுகின்றது. இதேவேளை காலதாமதமாக செல்லும் பஸ்களின் பயணிகளுக்கு தேவையற்ற முறையில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு புறம்பாக பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் கொழும்பு அவசரசேவைப் பிரிவைத் தொடர்புக் கொண்டு , குறித்த பஸ்களுக்கான உரிய காலத்தை அறிந்துக் கொள்ப்படும் . பின்னர் முதல் தடவையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆலோசனை வழங்குவதுடன் , இரண்டாவது தடவையாகவும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM