கந்தப்பளை கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை

Published By: Robert

01 Jul, 2016 | 03:10 PM
image

கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பைய்யா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன், அவரது உடலை லொறியால் ஏற்றிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான  மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கந்தப்பளைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஹெட்டித்தரிகே காமினி விஜேசூரிய, சமரகே சஞ்சீவ மஹிந்த பண்டார, அதுலகே நலீன் யூசுப் ஆகியோருக்கே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலைச்செய்யப்பட்ட நபர் உள்ளடங்களாக மேற்படி நால்வரும் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி திருட்டுச் சம்பவமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மரணமடைந்தவருக்கும் மேற்படி மூவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே இக்கொலைக்கு காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான வழக்கு, இன்று நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி மேற்படி மூவருக்கும் மரணத்தண்டனை வழங்கினார்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38