கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த தருணத்தில் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்அணிந்து கொள்வதை முற்றாக தவிர்க்க வேண்டுமென்று கண் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது... போன்ற சில வழிமுறைகளை மக்கள் தற்போது கடைப்பிடித்து வருகிறார்கள்.
வெளியில் செல்லும்போதும், பொதுவிடங்களில் கூடும்போதும்.. மக்கள் முக கவசம் அணிந்திருந்தால்.. வைரஸ் தொற்று பரவுவது நாற்பது சதவீதம் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை கடைபிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முக கவசத்தை அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கு சென்று, வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதன்போது கண்களையும் கழுவ வேண்டும். ஏனெனில் வைரஸ் தொற்றால் கண்களில் அலர்ஜி ஏற்பட்டு கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறியாக கண்களில் ஏற்படும் பாதிப்பும் உண்டு என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக கைகளை கழுவுவதைப் போல் அடிக்கடி கண்களையும் கழுவ வேண்டும். அத்துடன் முக கவசம் அணிந்திருக்கும் போதும், அணியாத போதும் கைகளைகொண்டு கண்களைக் கசக்கக்கூடாது. கண்களைத் தொடக் கூடாது எனினும் காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கண்களை தொடவேண்ய தேவை ஏற்படும் இதனால் இந்த காலகட்டங்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும்.
-டொக்டர் பிரசாந்த்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM