ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் எமது அணியின் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதம நிறைவேற்ற அதிகாரியான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐ.பி.எல். போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என பி.சி.சி.ஐ. தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவ்வாறு நடைபெற்றால், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் சிஎஸ்கே ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐ.பி.எல். வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர் என கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதம நிறைவேற்ற அதிகாரியான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்தவொரு ஐ.பி.எல். அணிக்கும் முதுகெலும்பாக இருப்பது இந்திய வீரர்கள். ஆனால், எங்களுடைய அணியை நீங்கள் அவதானித்தீர்கள் என்றால் சுனில் நரைன், அண்ட்ரே ரஸல், இயன் மோர்கன், தற்போது பெட் கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இணைந்து சிறந்த அணியை உருவாக்க முடியும்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM