(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் ஏனைய நாடுகளை காட்டிலும் இலங்கைக்கு அதிகமாக உள்ளது. சுற்றுலாததுறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன் முதற்கட்ட வெளிப்பாடு என பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் துறை கட்டிட நிர்மாணத்துறை அதிகாரிகளுடன் இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச நிதியின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை பயனுடையதாக மாற்றியமைப்பது, மற்றும் கட்டிட நிர்மாணத்துறையில் தனியார் துறையினர் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை துரிதமாக மீள கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம். கொவிட் - 19 வைரஸ் தாக்கம், உட்பட இதர காரணிகளினால் தற்போது இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டிலும் சுட்டிக்காட்டத்தக்க துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன . எவ்வாறாயிலும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான சாத்தியம் ஏனைய நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளன.
சுற்றுலாத்துறை சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன் முதற்கட்ட வெளிப்பாடாகும் என செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத விதத்தில் அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் செயற்திட்டங்களை தனியார் மற்றும் அரச கட்டிட நிர்மாணத்துறையினர் செயலணியின் தலைவரிடம் ஒப்படைத்தனர். இத்திட்டங்கள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு பசில் ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM