தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய பளுதூக்கல் வீராங்கனையான சஞ்சிதா சானு வலியுறுத்தியுள்ளார்.
2014 மற்றும் 2018 இல் நடந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கல் வல்லவர் போட்டிக்கு முன்னர், அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு முகாமினால் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை அறிக்கையில் சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிவிக்கப்பட்டதால், 2018 ஆம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தான் ஒருபோதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்று மறுத்த சஞ்சிதா சானு தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து ஹங்கேரியில் உள்ள சர்வதேச பளுதூக்கல் சம்மேளனத்திடம் முறையிட்டார். இதற்கிடையில், ஊக்க மருந்து சோதனையின் போது சஞ்சிதா சானுவிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் இலக்க நிர்வாக குளறுபடி காரணமாக மாறியதால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக ஒப்புக்கொண்ட சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் சஞ்சிதா சானுவின் இடைநீக்கத்தை இரத்து செய்தது. ஆனால் அவர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வந்தது. இதனால் சஞ்சிதா சானுவின் பெயர் அர்ஜூனா விருது தெரிவுக்கான பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், சஞ்சிதா சானு மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு விவகாரம் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அவருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு முகாமையின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சஞ்சிதா சானு கருத்து தெரிவிக்கையில்,
“ஊக்க மருந்து குற்றச்சாட்டிலிருந்து இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் நான் நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நான் இழந்த வாய்ப்புகளுக்கு பதில் என்ன?. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்த தவறுக்கு காரணம் யார் என்று கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச பளுதூக்கல் சம்மேளனத்தின் கடுமையான நடவடிக்கையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தேன். எனவே, சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் மன்னிப்பு கேட்பதுடன், நடந்த தவறுக்கு நியாயமான விளக்கமளிக்க வேண்டும். அத்துடன் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் இதற்காக நான் உயர் அமைப்புகளை நாடுவேன்’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM