எதிர்த் தரப்பிலுள்ள பலர் ஆளும் கட்சியுடன் இணைவர் - எஸ். எம். சந்திரசேன

Published By: Digital Desk 3

11 Jun, 2020 | 08:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் - 19 வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த  அரசாங்கம்  முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச , உள்ளுர் மட்டத்தில் கிடைக்கப் பெற்ற நிவாரண நிதி  குறித்த ஆவணங்கள்  புதிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  பொதுத்தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் எதிர் தரப்பின் பலர் ஆளும் தரப்புடன் இணைந்துக் கொள்வார்கள்  சுற்றுலாத்துறை அமைச்சர்   எஸ். எம். சந்ரசேன தெரிவித்தார்.

உலக  சுகாதார ஸ்தாபனம்  வழங்கிய நிவாரண நிதி தொடர்பில்   எதிர் தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து முறையான செயற்பாடுகளை முன்னெடுத்தது.    உள்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட நிவாரண நிதியத்துக்கு   அனைத்து தரப்பிலும் இருந்து  கிடைக்கப் பெற்ற  உதவிகள் அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு பாரிய ஒத்துழைப்பாக  இருந்தது.

கொவிட்- 19 வைரஸ்   கட்டுபாடு  சுகாதார மற்றும் பாதுகாப்பு நிதியம், உலக  சுகாதார ஸ்தாபனம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைக்கப் பெற்ற நிவாரண நிதி தொடர்பான அனைத்து ஆவணங்கள் செலவு செய்யப்பட்ட நிதிக்கான ஆவணங்கள் மற்றும் மிகுதி நிதி ஆகியவை தொடர்பான ஆவணங்கள் புதிய பாராளுமன்றத்தில்   சமர்ப்பிக்கப்படும்.

கிடைக்கப் பெறுகின்ற நிவாரண நிதி தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய  தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. எதிர்   தரப்பினர் தற்போது  எவ்விடயத்திலாவது அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்   சுகாதார  பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும். அரசாங்கம் தற்போது விதித்துள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அனைத்து தரப்பினரும்  பின்பற்றவேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின்  இரண்டு உறுப்பினர்கள் பொதுதேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்கள். 

நாட்டில்  பொறுப்பான எதிர்க்கட்சி தற்போது  இல்லை. ஐக்கிய  தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான  உள்ளக முரண்பாடு  தீவிரமடைந்துள்ளன. பொதுத்தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர்    ஐக்கிய தேசிய கட்சி,  ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய  கட்சியில் இருந்து  பலர் வெளியெறி ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55