கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக வைத்துக்கொள்வதற்காக கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், சச்சின் டெண்டுல்கர் புது ஆலோசனையொன்றை வழங்கியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்குவதற்காக வீரர்கள் பொதுவாக வியர்வை மற்றும் எச்சில் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால் எச்சில் பயன்படுத்த ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது.
இதன்படி, பந்தை தொடர்ந்து பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியாது போகும். இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக மாறிவிடும். பந்தை ‘ஸ்விங்’ செய்ய பந்து வீச்சாளர்கள் தடுமாறும் நிலை ஏற்படும்.
இதனால் பந்து வீச்சு – துடுப்பாட்டம் இடையே சமநிலை இல்லாமல் போகும். இதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு 45 முதல் 50 ஓவர்கள் முடிந்ததும் பந்தை மாற்றும் முடிவை கொண்டு வந்தால் நல்லது என்று ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுவாக டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு ஒருமுறை பந்து மாற்றப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM