வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்களை சேர்ந்த 477 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன். 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரை ஏற்று கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கமைய வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அந்தவகையில் இலங்கை தமிழரசுகட்சி, தமிழ்மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை சோசலிகட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பொதுமக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனசெதபெரமுன, சிங்கள தீப ஜாதிகபெரமுன, தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனி,தேசிய மக்கள்சக்தி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, மௌவிம ஜனதாகட்சி, ஜக்கியதேசியகட்சி, எக்சத் பெரமுன, ஜக்கிய மக்கள் சக்தி, தமிழர் விடுதலை கூட்டணி, முன்னிலை சோசலிசகட்சி, எங்கள் மக்கள்சக்தி கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை 10 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM