(எம்.மனோசித்ரா)
மத வழிபாட்டுத் தளங்களில் நபர்கள் ஒன்று கூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் விசேட அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தனியார் வகுப்புக்கள் மீள ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்கள் இம் மாதம் 12 ஆம் திகதி முதல் அனைத்து மத ஸ்தலங்களையும் வரையறுக்கப்பட்ட மக்களுடன் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் சமூக இடைவெளியைப் பேணும் வகையில் எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலத்திலும் 50 இற்கும் அதிகமானவர்கள் கூடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
எனினும் சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அடிப்படையில் 50 பேர் வரையில் கூடுவதற்கு போதுமான இட வசதி இல்லாத மத ஸ்தலங்களில் அதனை விட குறைவான எண்ணிக்கையிலானவர்களையே அனுமதிக்க வேண்டும்.
தனியார் வகுப்புக்கள்
மேற் கூறப்பட்ட வகையில் கட்டுப்பாடுகளுடன் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் வகுப்புக்களில் ஆகக் கூடுதலாக 100 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும். 100 மாணவர்களை அனுமதிக்க முடியாத தனியார் வகுப்புக்களில் அதனை விட குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM