இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், அதனை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவில் ரயில் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பஸ் நடத்துனர் மற்றும் சாரதிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM