பஸ்களில் பயணிப்போருக்கான முக்கிய அறிவித்தல் : ஜூலை இறுதி முதல் அமுல்படுத்த தீர்மானம்

Published By: J.G.Stephan

10 Jun, 2020 | 07:35 PM
image

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயணச்சீட்டுகளை விநியோகிக்கும் போது பெற்றுக்கொள்ளப்படும் பணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், அதனை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



குறித்த முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவில் ரயில் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் பஸ் நடத்துனர் மற்றும் சாரதிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47