அமெரிக்காவில் மினிபொலிஸ் நகரில் மே 25 ஆம் திகதியன்று ஜோர்ஜ் பிளொய்ட் என்ற கறுப்பினத்தவர் பொலிஸ் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
அவர் கழுத்தில் டெரக் சவின் என்ற வெள்ளை இன பொலிஸ் அதிகாரி முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வன்முறைக்களமாக மாறியது.
மேலும், அவரை கொலை செய்த பொலிஸ் அதிகாரி டெரக் சவின் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜோர்ஜ் பிளொய்ட்டின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஹவுஸ்டன் நகரில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், முதல்முறையாக இன்று டெரக் சவின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது மின்னசோட்டா அரச சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெரக் சவின், காணொளிக் காட்சி வாயிலாக நீதிபதிகள் முன் ஆஜரானார்.
அவர் மீது மூன்றாம் நிலை கொலைக் குற்றம், இரண்டாம் நிலை கொலைச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கான பிணை தொகை 10 இலட்சம் டொலர் முதல் 12.5 இலட்சம் டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீவிரத்தை வைத்துப் பார்க்கையில், அவருக்கு பிணை வழங்கினால் தப்பித்து ஓட முயற்சிக்கக்கூடும் என மின்னசோட்டா அட்டர்னி ஜெனரல் மேத்யூ பிராங் வாதிட்டார்.
வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 29ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் பிளொய்ட்டின் இறுதி அஞ்சலி இன்று நடைபெறவுள்ள நிலையில், நேற்று அவரது உடல் பொதுப்பார்வைக்காக வைக்கப்பட்டது.
மேலும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், ஜோர்ஜ் பிளொய்ட் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜோர்ஜ் பிளொய்ட்டின் உடலை அவரது தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM