(இரஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்கு ஏற்படும் காலதாமதம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் காரணிகள் பொருத்தமற்றதாகும். எதிர் தரப்பினருக்கு சாதகமாகவே ஆணைக்குழு செயற்படுகிறது தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபித்த காலத்தில் இருந்து தேர்தல்கள் ஏதும் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுத்தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்ந்து இழுப்பறி நிலையில் உள்ளது. தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பாட்டை தோற்றுவிப்பதாகவும், பொருத்தமற்றதாகவும் உள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாகவே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள் என்பது பல சம்பங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸதாபிக்கப்ட்ட காலத்தில் இருந்து எந்த தேர்தலும் உரிய காலத்தில் இடம் பெறவில்லை. உள்ளுராட்சி மன்ற தேர்தல் 3 வருட காலம் பிற்போட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாகவே நடத்தப்பட்டது . மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றில் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறும் என எதிர்பார்த்தோம். கொரோனா வைரஸ் தாகக்த்தை எதிர் தரப்பினர் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பொது காரணிகளை கொண்டு பொதுத்தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியும் ஆணைக்குழு பொறுப்பற்ற விதமாகவும், மந்தகரமாகவும் செயற்படுகிறது.
தொடர்ந்து பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்க முடியாது வெகுவிரைவில் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவது மாத்திரமே ஆணைக்குழுவின் செயற்பாடு எவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM