நியூஸிலாந்து கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக உலக இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்தில் நடத்தலாம் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை உலக இருபதுக்கு 20 தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உலக இருபதுக்கு 20 தொடர் இம்முறை நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இத்தொடர் நடத்தப்படுவது குறித்த ஐ.சி.சி.யின் இறுதித் தீர்மானத்துக்கான கூட்டம் நாளைய தினம் (10) நடைபெறவுள்ளது.
இவ்விடயம் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள டின் ஜோன்ஸ்,
“நியூஸிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. நியூஸிலாந்தில் அடுத்த வாரம் கொரோனா எச்சரிக்கை வழிமுறை ஒன்றுக்கு மாறலாம்.
குறிப்பாக இதே நிலை அங்கு நீடிக்கும் பட்சத்தில் சமூக விலகல் நடவடிக்கை மற்றும் மக்கள் கூட்டம் சேர்வதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை அடுத்த வாரத்தில் விலக்கிக்கொள்ளப்படலாம் என நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
எனவே, சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே உலக இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்தில் நடத்தலாம். இது ஒரு யோசனைதான்” என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் நியூஸிலாந்தில் தொற்று பரவுவதை தடுக்க விதிக்கப்பட்டிருந்த வழிமுறைகள் தளர்த்தப்பட்டு பழைய மாதிரியான சுதந்திர வாழ்க்கைக்கு அந்நாட்டு மக்கள் திரும்பியுள்ளனர். அந்நாட்டில் 1154 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் 22 பேர் மாத்திரமே உயிரிழந்ததுடன் ஏனைய அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் கடந்த 17 நாட்களில் எவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நாடாக மாறியுள்ளது நியூஸிலாந்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM