சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கில் சிறந்த ‘யோர்க்கர்’ பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தான் என இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பும்ரா, அண்மைக்காலமாக யோர்க்கர் பந்து வீசுவதில் சிறப்பானவராக விளங்குகிறார். மேலும், தற்போதைய ஐ.சி.சி. தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ள பும்ராவுக்கு, ஆரம்ப காலத்தில் லசித் மாலிங்க நிறைய உதவி செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் மாலிங்க குறித்த பும்ராவின் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பும்ரா மற்றும் மாலிங்க இணைந்துள்ள புகைப்படத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பும்ரா கூறுகையில், “லசித் மாலிங்க தான் உலகின் மிகச்சிறந்த ‘யோர்க்கர்’ பந்துவீச்சாளர். அவருடன் நீண்ட நாட்கள் சேர்ந்து விளையாடியது எனக்கு சாதகமான விடயமாக அமைந்தது. மும்பை அணிக்காக விளையாடிய போது மாலிங்க எப்பொழுதும் எனக்கு உதவி செய்வார் ”எனக் குறிப்பிட்டார்.
எனவே, லசித் மாலிங்க நீண்ட காலமாக யோர்க்கர் பந்து வீசுவதில் சிறந்து விளங்குவதாகவும், அந்த பந்துவீச்சைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் பும்ரா மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, மற்றொரு பகிர்வில் அவர் கூறியுள்ளதாவது, “வாரத்தின் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்படி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருப்பது எந்தளவு கைகொடுக்கும் என தெரியவில்லை. அதனால் இந்த இடைவேளைக்கு பின் பந்துவீசும் போது, எனது உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரியவில்லை.
ஆனால் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு நிச்சியமாக மாற்றுவழி இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பந்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நிச்சியம் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்தான்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM