சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பெயர், போலியாக தயாரித்த கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று சில பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே செய்யப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.
அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவது குறித்து தனது பதவிக் காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும், சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறை செயற்பட வேண்டும் என்பதும் ஜனாதிபதியின் கருத்தாகும்.
எனவே எவரேனும் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அது பற்றி உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலேவுக்கு (பணிப்பாளர் நாயகம், உள்ளக நிர்வாகம்) 0112354479ஃ 0112354354 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM