(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின புதிய தொழிநுட்ப பீடம் ஹோமாகம- பிடிபன தொழினுட்ப பூங்காவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் முதல் மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடமாகும். இதற்காக, 3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் , 1600 மாணவர்கள் கற்பதற்கான வசதிகளை கொண்டுள்ளது.
புதிய தொழில்நுட்ப பீடம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது . முத்திரையை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் தபால்மா அதிபர் ஜெனரல் ரஞ்சித் அரியரத்ன வழங்கி வைத்தார்.
பிரதமரின் அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக கடந்த கால அறிஞர்கள் சங்கம் நினைவு பரிசு வழங்கியது.
சங்கத்தின் தலைவர் டபிள்யூ. சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கா, பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சுதந்தா லியானகே, ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி ரேணுகா நில்மினி ஆகியோர் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM