பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதத்தில் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் தொடர்பான மாநாட்டில் பங்கு கொள்வதற்காகவே அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். குறித்த மாநாடு எதிர்வரும் ஜுலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த மாநாட்டில், துணைக் கண்டங்களுடனான சீனாவின் உறவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் விலகலின் முக்கியத்துவம் மற்றும் தெற்காசியாவில் இஸ்லாமியர்களின் பங்கு தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்தரையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில், சிங்கப்பூரின் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்னன், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் சிங்கப்பூரின் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்தக்கொள்ளவுள்ளதாக தெற்காசிய கல்வி நிலையத்தின் தலைவர் கோபிநாத் பிள்ளை தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டினை தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM