வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சலுகை  வழங்க வேண்டிய தேவை  அரசாங்கத்துக்கு கிடையாது  - வெளிவிவகார அமைச்சு

Published By: Digital Desk 3

08 Jun, 2020 | 04:38 PM
image

வெளிநாட்டு  இராஜதந்திரிகள் எவருக்கும்  சிறப்பு சலுகை  வழங்க வேண்டிய தேவை  அரசாங்கத்துக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலார்  சந்திப்பிலேயே அவர் இதனைக்  குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில்  பி. சி. ஆர் பரிசோதனையை நிராகரித்த    அமெரிக்க   இராஜதந்திரி தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றன.  

அமெரிக்காவிற்கு  சிறப்பு சலுகையினை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.  

அந்த அமெரிக்க இராஜதந்திரி  பி சி. ஆர்  பரிசோதனையை  வியன்னா ஒப்பந்தத்தின் பிரகாரம் புறக்கணித்தாக குறிப்பிடப்படுகின்றது.

அது தவறான   செயற்பாடு என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை   நாட்டுக்குள் வரும்  வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில்   இலங்கையில் உள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும்  விசேட  சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது    செயற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46